புதுடெல்லி: டெல்லி முதல்வராக பாஜக சார்பில் ரேகா குப்தா 2 நாட்களுக்கு முன்பு பதவியேற்றார். இந்நிலையில் ரேகா குப்தா நேற்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ரேகா முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடியை அதிகாரப்பூர்வமாக சந்தித்தார். அப்போது, டெல்லி மக்களுக்கு சேவை செய்ய தன்னை முதல்வராக்கிய பிரதமர் மோடிக்கு ரேகா குப்தா நன்றி தெரிவித்ததாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
பிரதமர் இல்லத்திற்கு செல்வதற்கு முன், டெல்லி ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் திரண்டிருந்த ஆதரவாளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இவ்வாறு முதல்வர் ரேகா தெரிவித்தார். “டெல்லியின் முதல் அமைச்சரவை கூட்டம். பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மக்களுக்கு சேவை செய்வதில் ஒரு நாளையும் வீணாக்க கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதனால் தான் தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற துவங்கியுள்ளோம்,” என்றார்.
இதனிடையே டெல்லி கேபினட் அமைச்சர்கள் நேற்று சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர். டெல்லி நகரம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் குண்டும் குழியுமான சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ரேகா குப்தா ஆலோசனை நடத்தினார். அப்போது, உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார். தேர்தலில் ஆம் ஆத்மி கன்வீனர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரபுல்லா 3-ம் கட்ட பணியை அவர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், பர்வேஷ் வர்மா கூறும்போது, “டெல்லி சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்ததாரர்கள் அமைக்கும் சாலைகள் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உறுதிமொழி அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளேன். சட்டம் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா. வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காட் பகுதியில் ஆய்வு செய்தார்.