சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் தனியார் பள்ளிகள் தொடங்க அந்தந்த மாநிலத்திடம் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். இந்தச் சான்றிதழை குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநில அரசு பள்ளிகளுக்கு வழங்குகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ விதிகளில் திருத்தம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 2026-27-ம் கல்வியாண்டு முதல் மாநிலங்களில் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க வேண்டும் என்றால், மாநில அரசிடம் தடையில்லாச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளி தொடங்க மாநில அரசிடம் அனுமதி பெறத் தேவையில்லை என சிபிஎஸ்இ புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பள்ளிகள் தொடங்குவதற்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய சட்டத்திருத்தத்தின்படி, தடையில்லா சான்றிதழ் இல்லாமல் பள்ளி தொடங்க விண்ணப்பம் வந்தால், ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளதா என்று கேட்டு சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு சிபிஎஸ்இ கடிதம் அனுப்பும். இதற்கு 30 நாட்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். பதில் வரவில்லை என்றால் மீண்டும் மாநில கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பப்படும்.
இதற்கு 15 நாட்களுக்குள் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும். இது தொடர்பாக பதில் வரவில்லை என்றால், மாநில அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்று எடுத்துக் கொள்ளப்படும். அத்துடன் பாடசாலை ஆரம்பிக்க கோரும் அனுமதிக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மாநில அரசின் அனுமதியின்றி நேரடியாக சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்குவதற்கு விதிகளில் திருத்தம் செய்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வித்துறையில் மத்திய அரசு தன்னிச்சையாக ஆதிக்கம் செலுத்துவது கூட்டாட்சி கொள்கையை குலைக்கும் செயலாகும்.
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் மத்திய அரசு ரூ.5000 கோடி நிதியை விடுவிக்காது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து சிபிஎஸ்இ விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மற்றும் மும்மொழித் திட்டத்தை தமிழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லாத வகையில் விதிகளைத் திருத்துவது, இந்தியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசின் மற்றொரு அதிரடித் திட்டம் என்பதில் சந்தேகமில்லை. எனவே, மாநில அரசின் அனுமதி பெறாமல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்கும் முயற்சியை முறியடிப்போம்,” என்றார்.