சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குனரகம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- தமிழக அரசுப் பள்ளிகளில் பிஎஸ்என்எல்-ன் அதிவேக பிராட்பேண்ட் இணையதள சேவை வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த சேவை 2 திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்கப் பள்ளிகளுக்கு (50 எம்பிபிஎஸ் வேகம்) இணையதள சேவைக் கட்டணமாக ரூ.710 தள்ளுபடி செய்யப்படும்.
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 900 (100 Mbps வேகம்). அதேபோல், இணைய சேவைக்கான மாதாந்திர கட்டணம் வரும் ஏப்ரல் மாதம் முதல் இயக்குனரகம் மூலம் நேரடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு செலுத்தப்படும்.
எனவே, பிஎஸ்என்எல் இணையதள சேவை தரவை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடனடியாக அப்லோட் செய்ய வேண்டும். பிற நிறுவனங்கள் மூலம் இணையதள சேவை பெற்ற அரசு பள்ளிகளும், இணையதள சேவை வசதி பெறாத பள்ளிகளும் பிஎஸ்என்எல் இணையதள வசதியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.