அரசு சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர் போட்டித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியச் செயலர் வி.சி. ராமேஸ்வர முருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசு சட்டக் கல்லூரியில் இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.