புளோரிடா: இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அடுத்த வாரம் பூமிக்கு திரும்ப உள்ளார். அவரை அழைத்து வந்த ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் அவர் பூமிக்கு திரும்பியதும் உடல் ரீதியாக சவால்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 9 மாதங்கள் தங்கியிருந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இவருடன் விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள அமெரிக்க விண்வெளி வீரரான பேரி வில்மோரும் இதே சவாலை எதிர்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் நீண்ட காலம் தங்கியிருப்பதாலும், புவியீர்ப்பு விசையின்மையாலும், உடல் ரீதியான பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக, இதற்கு முன் விண்வெளிக்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி வீரர் டெர்ரி விர்ட்ஸ், பூமிக்குத் திரும்பியதும் தலைசுற்றலில் இருந்து மீள சில வாரங்கள் ஆனது என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமிக்கு திரும்பும்போது நடக்க சிரமப்படுவார்கள் என்று நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் லெராய் சியாவோ கூறியுள்ளார். விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாததே இதற்குக் காரணம் என்றார்.
அவர்களின் காலில் calluses உருவாகியிருக்கலாம் என்றும் அவர் கூறினார். விண்வெளி வீரர்கள் தசை சிதைவு மற்றும் எலும்பு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என நாசா கூறியுள்ளது. விண்வெளி வீரர்கள் உடற்பயிற்சி மூலம் இதற்கு தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.