அயோத்தி: கடந்த 5 ஆண்டுகளில் ராம ஜென்மபூமி அறக்கட்டளை ரூ.400 கோடி வரி செலுத்தி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தச் சேத்திர அறக்கட்டளையின் செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது, இந்தியாவில் உள்ள முக்கிய ஆன்மிகத் தலமாக அயோத்தி ராமர் கோவில் உருவாகியுள்ளது.

நாளுக்கு நாள் இந்த கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மஹா கும்பமேளா காலத்தில் மட்டும் 1.26 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் 16 கோடி பேர் அயோத்திக்கு வந்துள்ளனர். அதில் 5 கோடி பேர் ராமர் கோவிலுக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்த அனைத்து வருவாயின் மத்தியில், கடந்த 5 ஆண்டுகளில் ராம ஜென்மபூமி அறக்கட்டளை ரூ.400 கோடி வரி அரசுக்கு செலுத்தியுள்ளது. அறக்கட்டலின் வரவு செலவு கணக்குகள், சி.ஏ.ஜி. அதிகாரிகளால் தொடர்ந்து தணிக்கை செய்யப்படுகின்றது, என்றார் சம்பத் ராய்.