By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு
    0 Min Read
    சைப்ரசில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது என்ன?
    1 Min Read
    அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்… ராணுவம் குவிக்கப்பட்டதால் எதிர்ப்பு
    1 Min Read
    ஈரான் தாக்குதலால் இஸ்ரேல் பிரதமர் மகன் திருமணம் ஒத்தி வைப்பு
    1 Min Read
    போரை நிறுத்துங்கள்… அமெரிக்க அதிபர் வலியுறுத்தல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் வீட்டு விலைகள் 79% உயர்வு
    1 Min Read
    அதே 11ஏ இருக்கை… 27 ஆண்டுகளுக்கு முன்பும் ஒருவரை காப்பாற்றியது!
    1 Min Read
    அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷின் அதிர்ச்சிகரமான வீடியோ
    1 Min Read
    2 மாதங்களுக்குப் பிறகு ஜம்முவில் சுற்றுலாத் தலங்கள் திறப்பு: ஆளுநர் மனோஜ் சின்ஹா
    2 Min Read
    டெல்லி மருத்துவமனையில் சோனியா அனுமதி
    8 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!!
    1 Min Read
    பழனியில் பிரேக் தரிசனம் குறித்து பக்தர்களின் கருத்துக்களை 29-ம் தேதி வரை தெரிவிக்கலாம்..!!
    1 Min Read
    மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத் தடுப்புப் பணிகள் தீவிரம்..!!
    1 Min Read
    தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற காசிமேடு மீனவர்கள்: பெரிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்..!!
    2 Min Read
    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அதிக எண்ணிக்கையில் கழுகுகள் வருவதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சென்னை மாநகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறையில் முரண்பாடு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலடி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > சென்னை மாநகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறையில் முரண்பாடு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலடி
தமிழகம்

சென்னை மாநகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறையில் முரண்பாடு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலடி

Nagaraj
Last updated: March 21, 2025 10:53 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025 – 2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (21.03.2025) நடைபெற்றது. அப்போது பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த், சென்னை மாநகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறையில் முரண்பாடு உள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலளித்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பா.ஜ.க மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் பேசுகையில், “சென்னை மாநகராட்சிக்கு வருவாய் பற்றாக்குறையில் முரண்பாடு உள்ளது. கடந்த ஆண்டு பள்ளிகளுக்கு வாங்கப்பட்ட கேமராக்களில் ஒரு கேமராவி்ன் விலை ரூ.60 ஆயிரம் எனவும் தற்போது அது ரூ.84 ஆயிரம் என அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம்? என தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “கடன் வட்டி தொகை பெரிதாக உள்ளது. அதே போல, வார்டு அடிப்படையில் வருவாய் தேவைகளை கொண்டு செலவினங்களை மாமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கலாம் என பரிந்துரை செய்கிறேன்” என உமா ஆனந்த் கூறினார்.

பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த்தின் பேச்சுக்கு மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதற்கு, உமா ஆனந்த், “வாயால் வடை சுடுவது தான் திராவிடம்” என கடுமையாக விமர்சித்தார். மேலும், ஜி.எஸ்.டி விவகாரம் தொடர்பாக நாளை சென்னை வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தான் சந்திக்க உள்ளதாகக் கூறிய உமா ஆனந்த், “நிதி அமைச்சர் பங்கு பெறும் கூட்டத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கு பெற வேண்டும். அந்த நிகழ்வில் பங்கு கொள்ளாமலேயே தொடர்ந்து தவறான தகவல்களை அவையில் கொடுத்து வருகிறார்கள். மத்திய அரசு நிதி கொடுத்திருக்கிறது; ஆனால், நிதி கொடுக்கவில்லை என தவறான தகவலை அவர்கள் கொடுத்து வருகிறார்கள்” என்று கூறினார்.

பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த்தின் கேள்விகளுக்கு நிதிநிலைக் குழு தலைவர் சர்ப ஜெயாதாள் விளக்கம் அளித்து பேசினார். “2021-ம் ஆண்டு மாநராட்சியின் கடன் ரூ.1,200 கோடியாக இருந்தது. 2024-ம் ஆண்டு வரை ரூ.912 கோடி கடன் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,026 கோடி கடன் உள்ளது. புதிய திட்டத்திற்காக வாங்கப்பட்ட கடன் தொகை 720 கோடி ரூபாய் என மொத்தமாக சென்னை மாநகராட்சிக்கு 1,746 கோடி கடன் உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய பா.ஜ.க கவுன்சிலர் உமா ஆனந்த், “சென்னை மாநகராட்சி பட்ஜெட், நிதி பற்றாக்குறை பட்ஜட்டாக உள்ளது என குற்றச்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, “ஆண்டுதோறும் 6% சொத்து வரி உயர்த்தினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு சொல்கிறது. இதனால், மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சியில் 6% சொத்து வரி உயர்த்தி ஆவணங்களை சமர்பித்து இருந்தாலும் தற்போது வரை சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கவில்லை” என பதிலடி கொடுத்தார்.

You Might Also Like

பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..!!

பழனியில் பிரேக் தரிசனம் குறித்து பக்தர்களின் கருத்துக்களை 29-ம் தேதி வரை தெரிவிக்கலாம்..!!

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத் தடுப்புப் பணிகள் தீவிரம்..!!

தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற காசிமேடு மீனவர்கள்: பெரிய மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றம்..!!

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அதிக எண்ணிக்கையில் கழுகுகள் வருவதால் பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி..!!

TAGGED:Central GovernmentChennai CorporationMayor Priyanot providing fundswill be affectedசென்னை மாநகராட்சிநிதி வழங்கவில்லைபாதிக்கப்படுவர்மத்திய அரசுமேயர் பிரியா
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
உலகம்

புலியின் வயிற்றில் இருந்து முடிகளை பிடுங்கிய சுற்றுலாப்பயணிகளால் பரபரப்பு

By Nagaraj 0 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?