By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலைப்படை தாக்குதல் பயிற்சி… மசூத் அசார் தகவல்
    2 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
    அமெரிக்காவின் அடுத்த அறிவிப்பு… விசா விண்ணப்பதாரர்கள் வலைத்தள கணக்குகள் கண்காணிப்பு
    1 Min Read
    சவுதி அரேபியாவில் லாட்டரியில் இந்தியருக்கு அடித்த யோகம்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கோல் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி குறைந்து விட்டதாக தகவல்
    1 Min Read
    இந்திய கடற்படை தினம்… பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    1 Min Read
    எஸ்ஐஆர் கணக்கீட்டு படிவங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்
    0 Min Read
    விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி
    1 Min Read
    இலங்கையை புரட்டிப் போட்ட டிட்வா புயல்… இந்தியா வழங்கி நிவாரணப் பொருட்கள்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்க மீண்டும் முயற்சி?
    1 Min Read
    தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாம் .. மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும்
    2 Min Read
    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் அகத்திக்கீரை
    1 Min Read
    மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்ய உதவும் நெல்லிக்காய் ஜூஸ்
    1 Min Read
    மருதாணி இலையில் இவ்வளவு …மருத்துவ குணங்களா !
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பயிர் வளம் செழிக்க உதவும் அசோலா… விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > பயிர் வளம் செழிக்க உதவும் அசோலா… விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை
விவசாயம்

பயிர் வளம் செழிக்க உதவும் அசோலா… விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை

Nagaraj
Last updated: July 9, 2025 5:25 pm
By Nagaraj 5 Min Read
Share
SHARE

சென்னை: உழவர்கள் கடினமாக உழைத்தாலும் நிலவளம் இன்றிப் பயிர் வளம் சிறக்காது. நிலத்திற்கு ஏற்பவே விளைவு சிறக்கும் என்பதை உழவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அத்தகைய மண்வளத்தைக் காக்க அங்கக வேளாண்மை செய்வது நலம். நெற்பயிரில் அசோலா மற்றும் நீலப்பச்சைப்பாசி தழைச்சத்தை காப்பதில் அசோலா அளித்து மண்வளத்தைக் பெரும் பங்கு வகிக்கின்றன.

மண் வளத்தை அதிகரித்தால் மகசூலும் அதிகரிக்கும். இயற்கை தந்த வரம், உயிர் உரம். நெல் வயலுக்கு ஏற்ற அசோலா பயன்படுத்துங்கள் பலனை அடையுங்கள் என்று வேளாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது.

அசோலா நீரில் வாழும் ஒரு வகை பெரணித் தாவரம். இது மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. ஆனால் இவற்றிற்கு மற்ற தாவரங்களைப் போல் தண்டுப்பகுதி கிடையாது. இலைப்பகுதி நீர்ப்பரப்பின் மேல் மிதந்தும், வேர்ப்பகுதி நீரில் அமிழ்ந்தும் காணப்படும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சை நிறமாகவும், கீழ்ப்பகுதி வெளிறிய பச்சை நிறத்துடனும் இருக்கும். அசோலாவின் வேர் பழுப்பு நிறமாக, நெற்பயிரின் வேரைப் போன்று சல்லி வேராக இருக்கும். ஆனால், மிகச்சன்னமாக காணப்படும். இதன் இலைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்தாற்போல, மிக நெருக்கமாகவும், கிளைத்தும் காணப்படும்.

அசோலா அசோலா என்று சொல்லும் போது தாவரத்தையும், இலைக்குழியில் தங்கி அதன் வாழும் நீலப்பச்சைப்பாசி எனும் நுண்ணுயிரியையும் சேர்த்துக் குறிக்கும். அசோலாவில் இலையின் மேற்புறத்தின் உட்பகுதியில் அனாபினா அசோலா என்றழைக்கப்படும் நீலப்பச்சைப்பாசி வளர்ந்து, காற்று மண்டலத்தில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து அசோலாவிற்கு கொடுக்கிறது. அசோலா தன்னிடத்தில் உள்ள பச்சையத்தின் மூலம் ஒளிச் சேர்க்கை செய்து அந்த உணவுப் பொருளை நீலப்பச்சைப் பாசிக்கு கொடுக்கிறது. இவ்வாறு அசோலாவும், நீலப்பச்சைப்பாசியும் ஒருங்கிணைந்த கூட்டு வாழ்க்கை வாழ்ந்து கிரகிக்கின்ற தழைச்சத்தை நெற்பயிருக்கு அளித்து பயிரின் வளர்ச்சினை ஊக்குவிக்குகின்றன.

இந்த அசோலா நீர் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. எனினும், சேற்றுடன் கலந்த நெல் வயலில் நன்கு வளர்கின்றன. அசோலாவில் பல வகைகள் இருந்த போதிலும், சில இரகங்கள் நமது தமிழ்நாட்டு தட்ப வெப்பநிலைக்கு ஏற்றவையாக உள்ளன. பொதுவாக நம் நாட்டில் அசோலா மைக்ரோஃபில்லா என்ற இரகம் அதிக வெப்ப நிலையைத் தாங்கி நன்கு வளர்வதோடு, அதிக அளவு தழைச் சத்தையும் கிரகிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அசோலா பெரும்பாலும் கோடை காலப் பருவத்தை தவிர மற்ற பருவங்களில் நன்கு வளரும். மழைக் காலங்களிலும், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் காலங்களிலும் நன்கு வளரும். தண்ணீர் வற்றி வறண்டுவிட்டால் அசோலா காய்ந்து விடும். எனவே தொடர்ந்து தண்ணீர் நிலத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். மேகமூட்டமான காலங்களிலும், நெற்பயிரின் நிழலிலும் இவை நன்கு வளரும். காரத் தன்மையுள்ள மண்ணில் வளர்ச்சி சற்று பாதிக்கப்படும்.

அசோலாவை நெற்பயிர் நட்ட ஒரு வாரத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் 100 கிலோ இட வேண்டும். 20 முதல் 25 நாட்களில் 10 டன் வரை அசோலா பெருக்கமடையும். அப்பொழுது தண்ணீரை வடிகட்டி களை எடுக்கும் ஆட்களைக் கொண்டு அசோலாவை வயலில் மிதித்து விடுவதால் அவை மக்கி தழை உரமாக நெற்பயிருக்கு கிடைக்கிறது. முதல் களையெடுப்பின் போது மிதிபடாது மிதந்து நிற்கும் அசோலா மீண்டும் வளர்ந்து வயல் முழுவதும் பரவிவிடும். இதன் போது மண்ணில் மக்கி தழை உரமாகிறது.

அசோலாவை மூன்று வகைகளில் வளர்த்து நெற்பயிருக்கு இடலாம். நாற்றங்காலில் வளர்த்தல், நெற்பயிரோடு வளர்த்தல், நடவு வயலில்தழை உரமாக வளர்த்தல், நாற்றங்காலில் வளர்த்தல்.

அசோலாவை நாற்றங்காலில் உற்பத்தி செய்வதற்கு முதலில் நிலத்தை தயார் செய்ய வேண்டும். இதற்கு நிலத்தை ஒரு சென்ட் அளவு கொண்ட பாத்திகளாக பிரிக்க வேண்டும். இந்த பாத்தியின் அகலம் 2 மீட்டருக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அசோலா வளர்ச்சி அடைந்த பிறகு பாத்திகளுக்கு வெளியிலிருந்தபடியே எடுக்க வேண்டும். உள்ளே இறங்கி எடுத்தால் அசோலா மிதிபடும்.

நெற்பயிரோடு வளர்த்தல்: தனியாக நாற்றங்கால் அமைக்க நிலம் இல்லாத நிலையிலும், நாற்றுகள் நடவுக்கு தயாராகி விட்ட நிலையிலும், நடவு வயலில் நாற்று நட்டு விட்ட நிலையிலும் அசோலாவை நாற்றங்காலில் வளர்த்து வயல் வெளியில் இடுவது இயலாது. அத்தகைய நிலையில் நெல் வயலில் நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு நேரடியாக அசோலாவை ஏக்கருக்கு 100 கிலோ என்ற அளவில் இடலாம். 20 முதல் 25 நாட்களில் இது நன்கு வளர்ந்து வயல் முழுவதும் பரவிவிடும். இந்த அசோலாவை முன்பு குறிப்பிட்டது போல் முதல் மற்றும் இரண்டாம் களையெடுப்பின் போது மிதித்து விடவேண்டும்.

அசோலாவை தழை உரமாக இடுதல்: பசுந்தாள் உரங்களை நெல் வயலிலேயே வளர்த்து உழவு செய்து விடுவது போல் அசோலாவை நடவு செய்ய வேண்டிய வயலில் இட்டு வளர்த்து, நடவு செய்வதற்கு ஒரு வாரம் முன்பு அசோலாவை மடக்கி உழுது மக்கச் செய்து பிறகு நாற்று நடுவது சிறந்தது. அசோலாவின் வேர்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் அவை செடியினின்று விடுபட்டு சேற்றுடன் கலந்து மக்கி அதிலிருக்கும் தழைச்சத்து நெற்பயிருக்கு கிடைக்கிறது.

அசோலாவினால் நெற்பயிருக்கு உண்டாகும் பயன்கள்
அசோலா குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய உயிர் உரம், ஒரு கிலோ பத்து ரூபாய் என்ற விலையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கிறது.
குறைந்த செலவில் அதிக பலனளிக்கிறது. அதாவது தழைச்சத்தின் தேவையில் 25 சதவீதம் வரை ஈடுகட்டுகிறது. வேகமாக வளரும் தன்மை கொண்டுள்ளதால் குறைவான அளவு வயலில் இட்டால் போதுமானது. நீரின் மேற்பரப்பு முழுவதும் படர்ந்து வளர்வதால் களைகள் வளர்வது பெருமளவில் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும் நீர் அதிகளவு ஆவியாகாமல் தடுக்கப்பட்டு நீரிழப்பு குறைகிறது. அசோலா இடுவதால் 15 முதல் 20 சதவீதம் வரை கூடுதல் விளைச்சல் கிடைக்கக்கூடும் என்று முடிவுகள் கூறுகின்றன. விவசாயத்தோடு மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை உபதொழில்களாக செய்து வருபவர்கள் அசோலாவை அவற்றிற்கு 5 சதவீதம் என்ற அளவில் தீவனமாக பயன்படுத்தலாம்.

You Might Also Like

தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட மாநாடு

இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க ஆலோசிக்கப்படும்… ரஷ்யா தகவல்

கர்நாடகாவில் சித்தராமையா-சிவக்குமார் சந்திப்பு

கர்நாடகாவில் சித்தராமையா-சிவக்குமார் சந்திப்பு

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

TAGGED:Animal HusbandryAzollaconsultancycrop fertilityfarmersfodderஅசோலாஆலோசனைகால்நடை வளர்ப்புதீவனம்பயிர் வளம்விவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்க மீண்டும் முயற்சி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?