By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷ்யாவுக்கு பெரிய இழப்பு
    2 Min Read
    வங்கதேசத்தில் தேர்தல் தாமதம்: இடைக்கால அரசை சுற்றியுள்ள புதிய நெருக்கடி
    1 Min Read
    சீனாவின் கடும் எச்சரிக்கை – பிரம்மபுத்திரா நதியை நிறுத்தும் அபாயம்
    1 Min Read
    இஸ்ரேல், ஹமாஸ் போருக்கு இடையே புதிய ஒப்பந்தம்
    1 Min Read
    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் – பிரதமர் ஷெபாஸ் ஒப்புதல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மத நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுத்ததற்காக ராணுவ அதிகாரி பணிநீக்கம்..!!
    1 Min Read
    மதச்சார்பின்மை இருவழிப் பாதையாக இருக்க வேண்டும்: பவன் கல்யாண் கண்டனம்
    2 Min Read
    கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரது படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம்: கர்நாடக அமைச்சர்
    1 Min Read
    திருமணம் பெண்களுக்கு நன்மையா சுமையா? ரெட்டிட் விவாதம்
    2 Min Read
    போர் நிறுத்தம் இந்தியாவின் தீர்மானம் – அமெரிக்கா காரணமல்ல என தெளிவுபடுத்தல்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!!
    1 Min Read
    கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்: இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!!
    1 Min Read
    இல்லாத சார்களை உருவாக்கி, இழிவான அரசியல் செய்யும் பழனிசாமி: அமைச்சர் ரகுபதி
    2 Min Read
    கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் உள்ள கவர்ச்சிகரமான வாத்து மலர்!
    1 Min Read
    மின்சார கட்டணம் அதிகரித்தால் தமிழ்நாட்டில் பல தொழில்கள் மூடப்படும்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சம்பா அறுவடைப்பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விவசாயம் > சம்பா அறுவடைப்பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்
விவசாயம்

சம்பா அறுவடைப்பணிகளில் தீவிரம் காட்டும் விவசாயிகள்

Nagaraj
Last updated: January 28, 2025 12:14 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிதான் முக்கியமானதாகும்.

ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடலை, உளுந்து, பயறு, சோளம், பூக்கள், காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வது வழக்கம். கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர். தஞ்சை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்ய 3.20 லட்சம் ஏக்கர் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வகையில் தஞ்சை மாவட்டம் முழுவதம் சுமார் 3.19 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது.

தற்போது சம்பா சாகுபடிக்காக அறுவடை பணிகள் மும்ழுரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் பெய்த மழையால் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து பாதிக்கப்பட்டன. மேலும் கடும் பனிப்பொழிவு இருப்பதால் நெல்கள் அனைத்தும் அறுவடை செய்ய முடியாத நிலையில் சாய்ந்து உள்ளது. இதே நிலை நீடித்தால் வயலில் சாய்ந்து கிடக்கும் நெல் முளைக்க ஆரம்பித்து விடும் என்று விவசாயிகள் கவலையில் உள்ளது. இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டம் 8 நம்பர் கரம்பை, ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் நெல்பழம் மற்றும் புகையான் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளது.

காலை மற்றும் இரவு நேரத்தில் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் நெல் ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி காய வைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே மருவத்தூர் பகுதியில் சம்பா சாகுபடி அறுவடை பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறை காரணமாக நாமக்கல், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அறுவடை இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 வரை வசூலிக்கப்படுகிறது. அறுவடை இயந்திரம் பற்றாக்குறை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இதனால் நன்கு முற்றிய நெல் கதிர்களை அறுவடை செய்து உலர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இல்லாவிட்டால் பனியால் நெல் பாதிக்கப்படும். அறுவடை இயந்திரம் வௌி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இறுவடை செய்து வருகிறோம். இன்னும் காலம் தாழ்த்திலாம் அறுவடை செய்வதில் பிரச்சனை ஏற்படும். இந்த மாத இறுதியில் மீண்டும் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதனால் தற்போது அறுவடையை தொடங்கியுள்ளோம். அறுவடை செய்த நெல்லை காய வைத்து பின்பு தான் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகிறோம். அறுவடை செய்யும் போது வயல்கள் ஈரமாக இருப்பதால் இயந்திரம் மூலம் அறுவடை செய்வதில் சவாலாக உள்ளது.

41 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல்லை அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.900க்கு வாங்கிக் கொள்கிறார்கள். வைக்கோல்கள் விற்பனை செய்வதிலும் பிரச்சனை உள்ளது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.40க்கு தான் விற்க முடிகிறது. மேலும் இந்த ஆண்டு மழை அதிக அளவில் பெய்ததில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

You Might Also Like

ஜூனையில் வெளியாகும் PM-KISAN திட்டத் தொகை: விவசாயிகள் எதைக் கவனிக்க வேண்டும்?

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3017 கனஅடியாக அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி

உயரும் வீராணம் ஏரியின் நீர்மட்டம்… விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு..!!

நேரடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 10 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படும்: வர்த்தகக் கழகம் உறுதி..!!

TAGGED:BusyfarmersharvestMaruvathurSamba Cultivationஅறுவடைசம்பா சாகுபடிமருவத்தூர்மும்முரம்விவசாயிகள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
விளையாட்டு

பந்துவீச்சுத் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தத் தவறிவிட்டோம்: ஹர்திக் வேதனை

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?