By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    அமெரிக்காவில் ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்
    2 Min Read
    ட்ரம்ப்பை பின்பற்றிய மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு
    2 Min Read
    கம்போடியா மீது தாக்குதல் நடத்திய தாய்லாந்து : மீண்டும் உருவான போர் பதற்றம்
    1 Min Read
    ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலைப்படை தாக்குதல் பயிற்சி… மசூத் அசார் தகவல்
    2 Min Read
    இந்தியாவுடன் மோதலை உருவாக்கும் வகையில் தாக்குதல்… ராணுவ தளபதி குறித்து குற்றச்சாட்டு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    இயற்கை எழில் நிறைந்த ஆறுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    2 Min Read
    இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இங்குதான் போகணும்
    1 Min Read
    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சூப்பர் இடம்… மகாராஷ்டிரா மாநிலத்தின் அலிபாக் கடற்கரை!
    2 Min Read
    கடல் அலைகளை ரசித்து உணவு அருந்த… சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ற அஞ்சுனா பீச்!
    1 Min Read
    மனம் மயக்க வைக்கும் ஆலப்புழாவிற்கு ஒரு பயணம்!
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    கடல் கடந்து வந்து நாட்டுப்புற கலைகள் கற்கும் மலேசியா கலைஞர்கள்
    1 Min Read
    இயற்கையாகவே எலும்புகளை வலிமையாக்க எடுத்துக்கொள்ள வேண்டிய பொருட்கள்..
    1 Min Read
    கண்களை சுழற்றும் போது வலி இருக்கா..அலட்சியம் வேண்டாம்..
    1 Min Read
    முத்து போன்ற வெள்ளை பற்களுக்கு முத்தான குறிப்புகள்
    1 Min Read
    புளிப்பொங்கல் செய்து பாருங்கள்… அசந்து போய்விடுவீர்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு… திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > ஆன்மீகம் > பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு… திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு
ஆன்மீகம்

பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு… திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு

Nagaraj
Last updated: November 26, 2025 7:44 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

சபரிமலை: சபரிமலையில் நாளை முதல் பக்தர்களுக்கு பாயசத்துடன் கூடிய மதிய உணவு வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு, தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதான உணவில் நாளை (வியாழக்கிழமை) முதல் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. பொதுமக்களின் பங்களிப்புடன் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் கூடிய சிறப்பான மதிய உணவு (சத்யா) வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட பிறகு, தினமும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சபரிமலையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பக்தர்களின் எண்ணிக்கை குறித்து முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்களில் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தினசரி நிமிடத்திற்குச் சராசரியாக 85 பக்தர்கள் வீதம் 18 ஆம் படி வழியாக ஏற்றி விடப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு 5 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், சபரிமலையில் கூட்ட நெரிசல் குறைந்து, பக்தர்கள் எளிதாகச் சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக டி.ஜி.பி. கூறினார். வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சீசனை முன்னிட்டுச் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 18 ஆயிரம் போலீசார் பல்வேறு குழுக்களாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் இரண்டாம் கட்டமாக 1,500 போலீசார் பணியில் பொறுப்பேற்றுள்ளனர். தேவைப்படும் நேரங்களில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநில போலீசாரும் சபரிமலை பாதுகாப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இனிமேல், அன்னதானத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்குடன், பொதுமக்களின் பங்களிப்புடன் புதிய மாற்றம் கொண்டு வரப்படுகிறது. அதன்படி, சன்னிதானத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்குப் பாயசம் மற்றும் அப்பளத்துடன் கூடிய சிறப்பான மதிய உணவு (சத்யா) வழங்கப்படும் என்றும் தேவஸ்தானத் தலைவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

You Might Also Like

ஆன்மீக பயணத்தில் ஷிர்டியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!!

பண வரவை அதிகரிக்க இதை மட்டும் பயன்படுத்தினால் போதும்

என்ன அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும்

செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்ட பச்சைக்கற்பூரம்

விமானத்தில் இருமுடி பைகளை எடுத்து செல்ல மத்திய அரசு சிறப்பு அனுமதி

TAGGED:annadhanadevoteesLunchpayasamSabarimalaTravancoreஅன்னதானம்சபரிமலைதிருவிதாங்கூர்பக்தர்கள்பாயசம்மதிய உணவு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது: தமிழக அரசு மீது இ.பி.எஸ் குற்றச்சாட்டு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?