சென்னை : மரகத நாணயம்-2′ படம் பற்றி நடிகர் ஆதி அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ஏ. ஆர். கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மரகத நாணயம்’. இதன் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் படத்தின் 2ம் பாகம் உருவாக உள்ளது.
இதுகுறித்து பேசிய ஆதி, “இப்படத்திற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். முதல் பாக குழுவினருடன், இன்னும் பெரிய குழுவினரும் இணைந்திருக்கிறார்கள்” என்றார்
நடிகர் ஆதியின் இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மரகத நாணயம் படம் வெளியாகி வசூலை குவித்ததும் குறிப்பிடத்தக்கது.