
சென்னை: அமரன் படத்தில் நாயகி சாய் பல்லவியின் மொபைல் எண்ணாக அவரது நம்பர் காட்டப்பட்டுள்ளது. அந்த எண்ணில் பலர் தொடர்பு கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாக சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருவதால் நிம்மதியாக தூங்க முடியவில்லை என தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் அவரால் படிக்க முடியவில்லை. நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.

அவர் அனுபவித்த மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமே காரணம். அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் தவறை சரி செய்யவில்லை. இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்தன. ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு அரசியல் சாசனம் வழங்கிய தனியுரிமைகள் மீறப்படுவதால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்.
OTT தளங்களில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். சென்சார் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை அளிக்க ஏர்டெல் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.