திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார். இந்நிலையில் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா முடிந்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா – ஜோதிகா தம்பதி சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.