சுவையான கொத்துக்கறி செய்வது எப்படி?
சுவையான கொத்துக்கறி செய்ய தேவையானவை:
கொத்துக்கறி – 500 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 2
கொத்தமல்லி இலை – 2 டீஸ்பூன்
புதினா இலைகள் – சிறிது
பச்சை மிளகாய் – 2
இஞ்சி-பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 5
பிரிஞ்சி இலை – ஒன்று
பட்டை – ஒரு சிறிய துண்டு
அன்னாசி – 1
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 5 டீஸ்பூன்
செய்முறை:
கொத்துக்கறியை தண்ணீரில் அலசவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய், அன்னாசி, சீரகம், பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகளை சேர்த்து இலைகள் சுருங்கும் வரை வதக்கவும். தேவையான உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
வதக்கிய கலவையில் கொத்துக்கறியை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, எடையைக் கூட்டி, குறைந்த தீயில் 12 நிமிடம் வேகவைத்து, அடுப்பை அணைக்கவும்.
பிரஷர் குக்கரைத் திறந்து, தண்ணீர் அதிகமாக இருந்தால், சிறிது நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு ஆனதும் இறக்கி சூடாகப் பரிமாறவும். சப்பாத்தி, பூரி, தோசை, சாதம் ஆகியவற்றுடன் இது ஒரு சுவையான டிஷ்.