இட்லி மற்றும் தோசை, வேலைக்கு செல்லும் பெண்களிடையே முதல் தெரிவாகும் சமையல் உணவுகள். இவை சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும் என்பதால், இல்லத்தரசிகள் அதிகம் விரும்புவார்கள். வார இறுதி அன்று 5 நாட்களுக்கு தேவையான இட்லி மாவை அரைத்து ஃபிரிட்ஜில் வைப்பது ஒரு வழக்கம். ஆனால் சில சமயங்களில் கைகேடு, வானிலை மாற்றங்கள் அல்லது ஃபிரிட்ஜ் பழுதுகள் காரணமாக மாவு புளித்து விடும். அப்படி புளித்துவிட்ட மாவை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி கவலைப்படாமல் எளிய சில டிப்ஸ்களை முயற்சிக்கலாம்.

முதலில், இட்லி மாவு புளிப்பது போல் இருந்தால், அதில் கொஞ்சம் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சிறிதளவு அரைத்து கலந்து கொள்வது நல்லது. இதனால் புளிப்பு தன்மை குறைந்து, மாவின் சுவையும் நன்கு இருக்கும். மேலும், புளித்த மாவில் சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கலாம். இதனால் புளிப்பு ருசி மற்றும் வாசனை குறையும். சுவையில் எந்தவித மாற்றமும் உண்டாகாது.
மேலும், புளித்த மாவில் கொஞ்சம் அரிசி மாவு சேர்க்கவும். இதனால் புளிப்புத் தன்மை குறையும், இட்லியும் தோசையும் சுவையாக இருக்கும். ரவை சேர்த்தாலும்கூட புளிப்பு சுவை குறையும்; தோசை முறுவலாகவும் சுவையாகவும் இருக்கும்.
மற்றொரு முறையாக, புதிதாக அரைத்த இட்லி மாவை கொஞ்சம் புளித்த மாவுடன் கலந்து பாருங்கள். இதனால் புளிப்பு தன்மை மறைந்து இட்லி, தோசை எளிதாக நன்கு வேகும்.
இந்த எளிய வழிகள் மூலம், இட்லி மாவு புளித்துவிட்டாலும் அதை வீணடிக்காமல், ருசிகரமாக பயன்படுத்த முடியும். அதனால் அடுத்த முறை மாவு புளித்தால் அதற்கு பதிலாக இந்த டிப்ஸ்களை நினைவில் வைக்கலாம்.