திருப்பதி கோவிலில் ஜூன் மாதத்தில் 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம்..
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மாதந்தோறும் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஜூன் மாதமும் 100 கோடியைத் தாண்டியது. ஜூன் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 20,00,187 பக்தர்கள் ஸ்ரீவாரி தரிசனம் செய்தனர்.
11-ம் தேதி 92,238 பேரும், 10-ம் தேதி 88,626 பேரும், 17-ம் தேதி 87,762 பேரும், 25-ம் தேதி 87,407 பேரும் தரிசனம் செய்தனர்.
கடந்த 18-ம் தேதி அதிகபட்சமாக ரூ.4 கோடியே 59 லட்சம் உண்டியல் வருமானம் கிடைத்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் ரூ.123.07 கோடியும், பிப்ரவரியில் ரூ.114.29 கோடியும், மார்ச்சில் ரூ.120.29 கோடியும், ஏப்ரலில் ரூ.144.12 கோடியும், மே மாதத்தில் ரூ.109.99 கோடியும், ஜூன் மாதத்தில் ரூ.116 கோடியும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.