தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம்: பிபோர்ஜோய் சூறாவளி உருவாகிறது
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி தொடங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி வரும் 8-ம் தேதி அதாவது நாளை தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அரபிக்கடலில் பிபோர்ஜோய் என்ற புயல் உருவாகி உள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது மேலும் ஒரு வாரம் தாமதமாகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.