May 12, 2024

கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் கனமழை

நியூயார்க்:அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்புயல் வீசுகிறது.இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டுள்ளன. சாலைகளில் பல அடிக்கு பனிக்கட்டிகள் உறைந்தன. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த பனிப்புயலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் தற்போது அமெரிக்காவில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கலிபோர்னியா மற்றும் சான்பிரான்சிஸ்கோவில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலை தொடர்ந்து தற்போது பெய்து வரும் மழை அமெரிக்காவை தலைகீழாக மாற்றி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!