திருப்பதியில் முக கவசம் கட்டாயம் – தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பத்து நாட்கள் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
சீனா, தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பிஎஃப்7 எனப்படும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்த வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேற்கண்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளும் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் அறிவித்துள்ளார்.