திருப்பதி: ஸ்வர்ணந்திரா 2047 தொலைநோக்கு செயல் திட்டம் ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர அரசு மேற்கொண்ட B4 திட்டத்தை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அமராவதி செயலகத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மதிப்பாய்வு செய்தார்.
அப்போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:- தங்கம் குடும்பம் திட்டத்தின் மூலம் ஆந்திரா முழுவதும் 15 லட்சம் குடும்பங்கள் தத்தெடுக்கப்பட உள்ளன. இதற்கான ஆரம்ப பணிகள் திருப்பதி மாவட்டத்தில் தொடங்கும். இந்த மாவட்டத்தில் 1911 குடும்பங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் மீதமுள்ள குடும்பங்கள் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தத்தெடுக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படும். இந்தப் பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும்.