புதுடில்லி: வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பிற்கான வரும் ஜூன் 15ம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை நீட் தேர்வை ஒரே கட்டமாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறு தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தேர்வு மையங்கள் மற்றும் போதிய வசதிகள் செய்து கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.