விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக பஞ்சாப் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் டெல்லி எல்லைப் பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோடீஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

பஞ்சாப் அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் குர்மிந்தர் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார். “ஜக்ஜித் சிங்கின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை முடிவுக்கு வந்தது. குடிநீர் வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கலைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், கன்னூரி மற்றும் ஷம்பு எல்லைப் பகுதிகளில் அடைக்கப்பட்டிருந்த சாலைகள் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளன” என்றார்.
அப்போது நீதிபதிகள், “விவசாயிகள் நடத்தும் போராட்டம் எங்களுக்கு நன்றாகவே தெரியும். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகள் தற்போது நிலவரப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங்குக்கு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறிய பஞ்சாப் தலைமைச் செயலர் மற்றும் டிஜிபி ஆகியோரைக் கண்டிக்கிறோம்.