புதுடில்லி: கடந்த 19 நாட்களாக தொடர்ந்து ஏற்பட்ட வந்த பதற்றத்துக்கு இடையில், நேற்றிரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவியதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மே 7ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்தது.

இந்த தாக்குதலுக்குப் பிறகு இருநாடுகளுக்கிடையேயான பதற்றம் உச்சத்தைத் தொடந்தது. ஆனால், கடந்த சனிக்கிழமை மாலை 5 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அதன் பின்னர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் மற்றும் பிற நகரங்களில் அமைதி நிலவியது.இந்த அமைதி நிலை, ஏப்ரல் 23 முதல் மே 6 வரை நிகழ்ந்த ட்ரோன் தாக்குதல், ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிச்சூடுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர், நேற்று இரவு எந்தவிதமான தாக்குதலும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்தினார்.இந்த அமைதி நிலை, எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலை மீண்டும் மலரத் தொடங்கியதைக் காட்டுகிறது. சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.
இது இருநாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னேற்ற முயற்சி செய்கிறதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.இந்த அமைதியான சூழல் நீடித்தால், எதிர்காலத்தில் எல்லைப் பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பதற்கான வாய்ப்பு உருவாகும். இந்திய ராணுவத்தின் தகவலின் அடிப்படையில், தற்போதைக்கு எல்லையில் நிலவி வரும் அமைதி நாட்டின் பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறது.