உத்தரபிரதேசம்: பக்தர்களின் வசதிக்காக கும்பமேளா நீரை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது, மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நடைபெற்றது. 66 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் பங்கேற்க முடியாத மக்களுக்கு மாநிலம் முழுவதும் புனித நீர் கொண்டு செல்லப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நீராட முடியாத பக்தர்களின் வசதிக்காக, உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் 31,000 லிட்டர் திரிவேணி சங்கம் நீரை தீயணைப்பு வாகனங்கள் மூலம் மாநில அரசு கொண்டு செல்கிறது.
முதல்கட்டமாக 10,000 லிட்டர் ‘அமிர்த ஜலம்’ நொய்டாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு டிரம்ஸ் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.