புதுடில்லி: டில்லியில் பணியாற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டதற்காக, மத்திய அரசு 24 மணி நேரத்தில் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

பஞ்சாப் போலீசாரும், ராணுவ பகுதிகளை உளவு பார்த்த குற்றச்சாட்டில் பெண் உட்பட இருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 13ம் தேதி, வெளியுறவு அமைச்சகம் அந்த துாதரக அதிகாரியை 24 மணி நேரத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
மேலும், பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரி, தனது அதிகார வரம்பை மீறியதற்காக, அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் தூதர்களும், அதிகாரிகளும் தங்களுடைய அதிகார வரம்பை மீறாமல் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.