பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பல இடங்களில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை இலக்காக கொண்டு முற்றிலும் அழித்ததாக மத்திய அரசு தெரிவித்தது.இந்த தாக்குதலின் போது எந்த ஒரு ஏவுகணையும் இலக்கைச் சேர முடியவில்லை என அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. இந்தியா கடந்த 11 ஆண்டுகளாக வான் பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.
அதிநவீன டிரோன் எதிர்ப்பு ஆயுதங்கள், எஸ்-400 வான் பாதுகாப்பு கவசம், ஆகாஷ் மற்றும் பாரக் -8 ஏவுகணைகள் ஆகியவை தற்போது நாட்டின் முக்கிய பாதுகாப்பு சீரமைப்பாக இருக்கின்றன.இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சீனாவால் வழங்கப்பட்ட எச்.க்யூ.99 வான் பாதுகாப்பு கவசம் மற்றும் ரேடார் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.இந்தியாவின் வான் பாதுகாப்பு திட்டம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன்படி எஸ்-400 கணைகள் வாங்கப்பட்டு தற்போது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் செயல்பட்டு வருகிறது.பாரக்-9 ஏவுகணைகள் இஸ்ரேலிலிருந்து வாங்கப்பட்டு பஞ்சாபில் உள்ள ராணுவ தளத்தில் செயல்படுகிறது. ஆகாஷ் ஏவுகணை பேட்டரிகள் மற்றும் டிஆர்டிஓ உருவாக்கிய டிரோன் எதிர்ப்பு அமைப்புகளும் பாதுகாப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன.‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் இந்திய தயாரிப்புகளான வெடிமருந்துகள் மற்றும் தற்கொலை டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.
இந்த தாக்குதலால் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இஸ்ரேலின் ஹாரோப் டிரோன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு அமைப்புகளை அழிக்க பயன்படுத்தப்பட்டன.இந்த நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்பு துறையின் வலிமையையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வெளிப்படுத்துகின்றன.இந்த தாக்குதல்களை முறியடித்ததன் மூலம் இந்தியா தனது தற்காப்பு திறனைக் காட்டியுள்ளது.
மத்திய அரசு வழங்கிய தகவலின்படி எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு எதிராக இந்தியா தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் முயற்சிகள் முற்றிலும் தோல்வியடைந்தன.இந்தியாவின் பலத்த எதிர்வினைக்கு பாகிஸ்தான் இன்னும் பதில் அளிக்காத நிலையில் உள்ளது.இது சர்வதேச ரீதியில் இந்தியாவுக்கு ஆதரவை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.
இந்த தாக்குதலில் இந்தியாவின் உள்நாட்டு ஆயுத உற்பத்தி திறனும் வெளிப்பட்டது.இந்தியா தற்போது முழுமையான பாதுகாப்பு அரசாக உருவெடுத்து வருகிறது.இந்த நடவடிக்கைகள் எதிர்கால பாதுகாப்பு பணிகளில் வழிகாட்டியாக இருக்கும்.இந்திய பாதுகாப்பு துறை தற்போதைய சூழ்நிலையில் மிகுந்த விழிப்புடன் செயல்படுகிறது.பாகிஸ்தான் தொடர்ந்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தினாலும், இந்தியா ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக எதிர்கொள்கிறது.இந்த தாக்குதல்கள், பாதுகாப்பில் தளர்வு இல்லாமல் நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசின் திடம்சான நிலையை வெளிப்படுத்துகின்றன.