புது டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X பதிவில், “ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் 1 சதவீதக் குறைப்பு காரணமாக வங்கிகள் தங்கள் வைப்பு விகிதங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதன் காரணமாக, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளன.

இது மூத்த குடிமக்கள் மற்றும் பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கிறது. வங்கிகள் ஏற்கனவே பொதுமக்களுக்கு தங்கள் கதவுகளை மூடிவிட்டன. அவை பணக்கார முதலாளித்துவ நண்பர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும். இது நாட்டு மக்களுக்கு எதிரான மிகப்பெரிய அநீதி மற்றும் ஏமாற்று வேலை. கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் மோசமடைந்து வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை. ” இவ்வாறு அவர் கூறினார்.