புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று அனைத்து பேருந்துகளையும் நிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகம் (பிஆர்டிசி) மூலம் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 265 ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் இவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்று காலை முதல் அனைத்து அரசு சாலை போக்குவரத்து கழக பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தி போராட்டத்தை தொடங்கினர். அரசு பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.