புது டெல்லி: இந்தியாவிற்கான சீனத் தூதர் சூ பெய்ஹோங், ஆண்டின் முதல் 7 மாதங்களில், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 88 பில்லியன் டாலர்களை எட்டியதாக கூறினார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நடந்த வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது இது 10.5 சதவீதம் அதிகமாகும். இந்திய நிறுவனங்களை சீனா இன்னும் அதிகமாக வரவேற்கத் தயாராக உள்ளது.
இதேபோல், இந்தியாவில் சீன நிறுவனங்களுக்கு பாகுபாடற்ற வணிகச் சூழலை நாங்கள் எதிர்நோக்குகிறோம். வளர்ச்சி உத்திகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், இந்தியாவுடன் நவீனமயமாக்கலில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் சீனா தயாராக உள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், சீனாவில் முதலீடு செய்யவும் நாங்கள் வரவேற்கிறோம்.

சீன நிறுவனங்களுக்குத் தேவையான பாகுபாடற்ற மற்றும் நியாயமான வணிகச் சூழலை நாங்கள் வழங்க முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம். வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால் எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்க முடியும் என்று சூ பெய்ஹோங் கூறினார்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை அமல்படுத்தும் நேரத்தில் சீனா இந்த யோசனையை வெளிப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.