இன்று நம் வாழ்க்கை முறையில் ஆரோக்கியம் என்ற பெயரில் புரோட்டீன் பவுடர்கள், உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் பரிந்துரைக்கப்படும் உணவுகள், கொழுப்பு எரிக்கும் சப்ளிமெண்ட்கள் போன்றவை பெரிதும் இடம்பிடித்துள்ளன. நம் உடலை நன்றாக பராமரிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த வழிமுறைகள், அவற்றை அளவோடு கடைப்பிடிக்காவிட்டால், எதிர்பாராதவிதமாக உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.

சிலர் சப்ளிமெண்ட் என்றாலே அதிகம் எடுத்தால்தான் பலன் என்று நம்புகிறார்கள். ஆனால் உண்மையில் கூடுதலாக ஒரே ஒரு மாத்திரை கூட உங்கள் உடலில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். சில சப்ளிமெண்ட்கள் குறைவான அளவில் கூட தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை.
முக்கியமாக உடற்பயிற்சி செய்யும் முன் எடுக்கும் கஃபைன் கலந்த சப்ளிமெண்ட்கள், சிலருக்கு மின்சார உணர்வை கொடுத்தாலும், அளவுக்கு மீறி எடுத்தால் மாரடைப்பிற்கு காரணமாகலாம். அதேபோல், வைட்டமின் டி தேவையான அளவைவிட அதிகமாக உட்கொள்ளும் போது, இரத்தத்தில் கால்சியம் அளவை அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய பாதிப்பை ஏற்படுத்தும்.
பொட்டாசியம் சப்ளிமெண்ட் அதிகமாக எடுத்தால், இதயத்துடிப்பு ஏற்பட்டு ஹைபர்கேலிமியா எனப்படும் நெரிசல் நிலைக்கு ஏற்படலாம். உணவுகள் மூலமாகவே அந்த சத்துக்களைப் பெற முயலுங்கள். கிரியேட்டின் மாத்திரைகளை அதிகமாக எடுத்தால், நீரிழப்பு, எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு, சிறுநீரக சிக்கல்கள் வரக்கூடும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு தேவையானவை என்றாலும், தினமும் 3 கிராமுக்கு மேல் எடுத்தால் இரத்தப்போக்கு மற்றும் பக்கவாத அபாயம் உள்ளது. அதேபோல, இரும்புச்சத்து சப்ளிமெண்ட்கள் தேவையைவிட அதிகமாக எடுத்தால், ஃப்ரீ ரேடிக்கல்களால் திசு சேதம், இதய செயலிழப்பு போன்றவை உருவாகலாம்.
முன்பு இதய நோய்களுக்கு அருமருந்தாக கருதப்பட்ட வைட்டமின் ஈ கூட தற்போது அதிகமாக எடுத்தால், இரத்தக்கசிவு பக்கவாதத்தை உருவாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வகையான எல்லா சப்ளிமெண்ட்களும் உடலுக்கு நன்மை செய்யும் என்பது உண்மைதான். ஆனால் அவற்றை அளவோடு உட்கொள்வது மட்டுமே அவை நன்மையைத் தரும். உங்கள் உடலுக்கு தேவையான அளவு, உங்கள் வயது, உடல்நிலை மற்றும் பயிற்சி நிலைக்கு ஏற்ப மாறுபடும்.
மிகவும் முக்கியமானது, சுயமுயற்சியாக மாத்திரைகள் அல்லது சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்ளாமல், மருத்துவர் அல்லது சுய சப்ளிமெண்ட் நிபுணரின் ஆலோசனை பெறுவது. உணவுகளை மூலமாகவே சத்துக்களை பெறுவதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை என்பது அளவோடு வாழும் கலையாக இருக்க வேண்டும், அதில் எல்லையற்ற அனுசரணை ஆபத்தை உருவாக்கும்.