சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்ட அறிக்கை:- தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சட்ட மாண்புக்கு எதிராகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றமே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அரசியல் சாசனத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக மக்களும், ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்; மற்றும் 25.04.2025 அன்று சென்னை சாஸ்திரி பவன் முன் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிலுவைத் தொகையான ரூ.1000ஐ உடனடியாக வழங்கக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ரூ. 3,796 கோடி, ஒதுக்கீடு சமக்ரா சிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கு ரூ.2,152 கோடி ஒதுக்கீடு, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்த போராட்டத்தில் அரசியல் குழு உறுப்பினர் உ.வாசுகி மற்றும் வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை மாவட்ட செயலாளர்கள், கழக தோழர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
தமிழகம் மற்றும் மக்களின் நலனைக் காக்கும் இந்தப் போராட்டத்திற்கு ஜனநாயக இயக்கங்களும், பொதுமக்களும் முழு ஆதரவைத் தருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.