அரியலூர்: மத்திய அரசு – மாநில அரசுகளின் இணக்கம் என்பது, வருங்கால தமிழகத்தின் வெற்றி. ஆட்சி மாற்றம் அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட: மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அரியலூரில் பிரச்சாரம் மேற்ொண்டார்.
அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமரை எஸ் ராஜேந்திரன் ஆதரித்து திருமானூரில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருமானூர் பேருந்து நிலையம் முன்பு கூடி இருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
ஏன் திமுகவை மக்கள் விரோத அரசை என்கிறோம். திமுகவுடன் நமக்கு என்ன சொத்து தகராறா? அல்லது பங்காளி சண்டையா? கிடையாது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொய் வாக்குறுதிகளை தந்து மக்களை நம்ப வைத்து அதனை நிறைவேற்றது ஏமாற்றிய அரசு திமுக அரசு.
நரேந்திர மோடியின் தலைமையிலே நல்லரசாக செயல்படும் மத்திய அரசு, வருங்காலத்திலே இந்தியாவை வல்லரசாக மாற்றம் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. கொரோனா பெருந்துட்டிற்கு பிறகு இந்தியா படிப்படியாக பொருளாதார ரீதியில் உயர்ந்து இருப்பதற்கு காரணம் பாஜக அரசு.
இந்தியா என்றால் வலிமையான பாரதம் என்று பெயர் அதற்கு ஈடாக வளமான தமிழகம் தேவை. பெருந்தலைவர் காமராஜர் மக்கள் தலைவர் மூப்பனார் வளமான தமிழகம், வலிமையான பாரதம். மத்திய அரசு பிரதமரின் தூய்மை திட்டத்திற்கு 19 லட்சத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் உதவித்தொகை வழங்கி உள்ளது.
1.5 கோடிக்கு அதிகமான குடிநீர் குழாய் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ளது. 41 லட்சத்திற்கும் அதிகமான உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. எதற்காக நான் சொல்கிறேன் என்றால் மத்திய மாநில அரசுகளின் இணக்கம் வருங்காலத்தில் தமிழகத்தின் வெற்றி.
ஆட்சி மாற்றம் அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட அந்த தேவையின் காரணம் பணநாயகமா? ஜனநாயகமா?, நேர்மையா?ஊழலா? என்பதை முடிவு செய்து, அரியலூர் தொகுதி மக்கள் இரட்டை சின்னத்தில் வாக்களித்து தாமரை எஸ்.ராஜேந்திரனை வெற்றி பெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொண்டார்.