சென்னை: பா.ம.க. பிரச்சனையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டது என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் – அன்புமணி இடையேயான பிரச்சனையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக பா.ம.க. கெளவரத் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பேட்டியளித்த அவர், கட்சியில் நிலவிய அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டதாக கூறினார்.
விரைவில் ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக சந்தித்து அடுத்தக்கட்டம் குறித்து பேசுவார்கள் என்றும் ஜி.கே. மணி விளக்கமளித்தார். பாமக பிரச்னைதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை கிளப்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.