கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை இறந்தது
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நஞ்சப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்த பிரபாகர் – தனலட்சுமி தம்பதியின் நான்கு வயது மகள் தக்ஷனாஸ்ரீ, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் விழுந்து உயிரிழந்தது. தீயணைப்பு துறையினர், குழந்தையை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.