சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு
சென்னை: நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த 19ம் தேதி 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 20, 21ம் தேதிகளில் நடந்தது. இந்நிலையில், இன்று (பிப்.22) பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததையடுத்து, சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.