பணநாயகம் அதிகமாக உள்ளது சமக தலைவர் சரத்குமார் வேதனை
காரைக்குடி: சமக தலைவர் சரத்குமார் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “என் தலைமையில் கூட்டணி சேருங்கள் என அழைப்பது அதிகமான சிந்தனையாக இருக்கும். இன்றைக்கு பணநாயகம் அதிகமாக உள்ளது. மக்கள் மாறுகின்ற சூழல் வரும்போது எனது தலைமையில் கூட்டணி அமையலாம். தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது குறித்து பிப்.24ம் தேதி நடைபெறும் கட்சி நிர்வாக குழுக் கூட்டத்துக்குப் பின் அறிவிக்கப்படும்” என்றார்.