மல்லிகைப்பூவில் அறிஞர் அண்ணாவின் ஓவியம்
கோவை: கோவை ஓவியர் யு.எம்.டி. ராஜா அசத்தினார்… தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 55வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
கோவையில் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, ஓவியர் யு.எம்.டி. ராஜா என்பவர் மல்லிகைப்பூவில் அவரின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார். சிறிய பூவில் ஒரு உருவத்தை வரைந்த அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.