கார் பந்தய வீரர் அயர்டன் சென்னா நினைவுதினம்
பிரேசில்: மூன்று முறை ஃபார்முலா ஒன் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் கார் பந்தய வீரர் அயர்டன் சென்னாவின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு இத்தாலியில் நடந்த ஃபார்முலா ஒன் சாம்பியன் போட்டியின்போது விபத்தில் சிக்கி, அயர்டன் சென்னா உயிர் நீத்த இடத்தில் கூடிய கார் பந்தய வீரர்கள் மற்றும் ரசிகர்கள், மலர் வளையம், பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினர்