கார்த்தி சிதம்பரம் பிரச்சாரத்தில் தள்ளுமுள்ளு
பொன்னமராவதி: யார் நீங்க…? சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வாக்குசேகரித்து பேசிக் கொண்டிருந்தபோது, யார் நீங்க என்று கேட்ட ஒருவரை பலரும் அடிக்க பாய்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேச முயன்ற கார்த்தி சிதம்பரம் கூச்சல் குழப்பத்தால் பேச்சை இடையே நிறுத்த நேரிட்டது.