பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்: மன்சூர் அலிகான் அறிக்கை
சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அறிக்கையொன்று விடுத்துள்ளார். அதில், “நேற்று பிரச்சாரத்தின் போது ஒரு இடத்தில் கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ், மோர் குடுத்தாங்க. அதன்பின் மருத்துவமனையில் விஷ முறிவு, நுரையீரல் வலி போக டிரிப்ஸ் குடுத்தார்கள்” என கூறியுள்ளார். அவரது இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.