பஞ்சாப் அணியை மிரட்டிய மயங்க் யாதவ்
புதுடில்லி: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் இளம் வீரர் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நேற்று இவர் மொத்தமாக 24 பந்துகளை வீசினார். அதில் 18 பந்துகளை மணிக்கு 145 கிமீ வேகத்திற்கு வீசி எதிரணியினரின் ரன்களை கட்டுப்படுத்தினார். அதிகபட்சமாக 12வது ஓவரின் முதல் பந்தை மணிக்கு 156 கிமீ வேகத்தில் வீசினார். மேலும் ஆட்ட நாயகன் விருதையும் இவரே வென்றார்.