பேனா நினைவுச்சின்னம்… மத்திய அரசுக்கு கடிதம்
சென்னை: சென்னை மெரினாவில் கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி உள்ளது. பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. அனுமதி வழங்குவது குறித்து விரைவில் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு முடிவெடுக்க உள்ளது.