கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி நியமனம்
சென்னை: நெல்லை அம்பாசமுத்திரம் காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்ஸை நியமித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல் உட்கோட்டத்தில் வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விரிவான இவர் விசாரணை நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அமுதா ஐஏஎஸுக்கு அரசு உத்தரவு இட்டுள்ளது.