சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை
சென்னை: சென்னை- ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரவு முதலே காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது டிக்கெட்டை வாங்கிச் செல்கின்றனர்.