வரும் 12ம் தேதி காணொலி வாயிலாக ரயில் சேவை தொடக்கம்
பெங்களூர்: பெங்களூருவிலிருந்து ஏற்கனவே சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில், சென்னைக்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் மார்ச் 12ம் தேதியிலிருந்து இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி 12ம் தேதியன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். இத்தகவலை பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி பி.சி.மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.