கோவை: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சைபர்-கிரைம் கும்பலுக்கு 3 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறியதாக செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி, முதியவரின் வங்கி கணக்கிலிருந்து 16 லட்ச ரூபாயைத் திருடிய 10 பேர் கும்பலுக்கு, ஆளுக்குத் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தனது செல்போனுக்கு வந்த மெசேஜில் இருந்த லிங்கை சாமுவேல் சந்திரபோஸ் என்பவர் கிளிக் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்த பணிக்கால சேமிப்புத் தொகை 16 லட்சத்து 50,000 ரூபாய் மாயமானதாக கூறப்படுகிறது.
சைபர் கிரைம் போலீசாரிடம் அவர் அளித்த புகாரின் பேரில், மோசடியில் ஈடுபட்ட 10 பேர் கும்பலை குஜராத் மாநிலம் சூரத்தில் வைத்து போலீசார் கைது செய்திருந்தனர்.