சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், 2025 பிப்ரவரியில் 86,65,803 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 07.02.2025 அன்று அதிகபட்சமாக மெட்ரோ ரயில்களில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 3,56,300 ஆகும்.
பிப்ரவரி 2025-ல் மட்டும், 14,80,150 பயணிகள் பயண அட்டை டிக்கெட் முறையைப் பயன்படுத்தினர், 936 பயணிகள் டோக்கன்களைப் பயன்படுத்தினர், 6,046 பயணிகள் குழு டிக்கெட் முறையைப் பயன்படுத்தினர், 37,56,385 பயணிகள் QR குறியீடு டிக்கெட் முறையைப் பயன்படுத்தியுள்ளனர் (ஆன்லைன் QR 1,52, 47 Paper Static QR47; 2,68,084 வாட்ஸ்அப் – 6,14,516; Paytm 4,18,839; ONDC – 1,27,706, 34,22,286 பயணிகள் சிங்கார சென்னை கார்டு. சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு QR குறியீடு (OR குறியீடு) டிக்கெட்டுகள், பயண அட்டைகள், Whatsapp, Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை கார்டு போன்ற அனைத்து வகையான டிக்கெட்டுகளுக்கும் 20% தள்ளுபடி வழங்குகிறது.
சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாகவும், Paytm ஆப் மூலமாகவும் பயணிகள் தங்களது டிக்கெட்டுகளைப் பெறலாம். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிக்க அதிக அளவில் ஒத்துழைக்கும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.