சென்னை: வடசபரி என்று போற்றப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப சுவாமி தனது பரிவாரங்களுடன் பதினெட்டு படிகள் ஏறி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்தும், விரதம் இருந்தும், இருமுடி கட்டிக்கொண்டும், பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனை தரிசனம் செய்தும் வருகின்றனர்.
இக்கோயிலில் கடந்த ஆண்டு பாலாலயம் கட்டப்பட்டு, ரூ. 4.50 கோடியில் மேற்கொள்ளப்பட்டது. விநாயகர், நவகிரகங்கள், ஆஞ்சநேயர் சுவாமிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த மார்ச் மாதம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் வருடாந்திர பிரம்மோத்ஸவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி டி.கே. மோகன் உள்ளிட்டோர் கொடி ஏற்றுவார்கள்.

இரவு திரவிய பூஜை, 1008 கலசங்கள் ஸ்தாபனம், ஸ்ரீ பூத பலி, தீபாராதனை நடைபெறும். 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணி முதல் 18 மணி வரை பூஜை மற்றும் புஷ்ப அபிஷேகம் நடைபெறும். 25-ம் தேதி கணபதி ஹோமம், உஷபூஜை, ஸ்ரீ பூத பலி அபிஷேகம், தீபாராதனையும், இரவு 7 மணிக்கு ஐயப்ப சுவாமி வெள்ளி ரத ஊர்வலமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, 26-ம் தேதி பட்டினப்பாக்கத்தில் சயன பூஜை, தீபாராதனை, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு செய்து வருகிறது.