சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க நாட்டுப்புற மருந்தைப் பயன்படுத்தலாம் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. பரவும் செய்தி “மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நாட்டுப்புற மருந்தை அரசு அங்கீகரித்துள்ளது.
ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் கால் ஸ்பூன் இஞ்சி சாறு ஆகியவற்றைக் கலந்து வெறும் வயிற்றில் 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், கொரோனாவை 100% தடுக்கலாம்” என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது உண்மை என்ன? இது தவறான தகவல்.

2018-ம் ஆண்டில், கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு, சளி மற்றும் இருமலுக்கு கஷாயம் தயாரிப்பதற்கான செய்முறை புகைப்படங்களுடன் ஒரு வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதே புகைப்படத்துடன் கொரோனா மருந்தாக செய்முறை பரப்பப்படுகிறது. தேன், இஞ்சி மற்றும் மிளகு ஆகியவை கொரோனா வைரஸுக்கு ஒரு சிகிச்சையாகும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.