தாம்பரம்: சென்னை எழும்பூர் – கடற்கரை இடையே நான்காவது தண்டவாளம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நேற்று காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டன.

பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பஸ்களில் ஏற, பஸ் ஸ்டாண்டில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். தாம்பரம் – கடற்கரை இடையே நேற்று பகல் முழுவதும் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், குரோம்பேட்டை ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதால், சிறப்பு ரயிலைப் பிடிக்க ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பேருந்து நிலையங்களில் குவிந்தனர். மாலை 4.10 மணிக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டதால் கூட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.